மக்களவைத் தேர்தல் ப்ளான் என்ன? நாளை மறுநாள் அமமுக செயற்குழு! முக்கிய முடிவு எடுக்கும் தினகரன்!
சென்னை: நாளை மறுநாள் சென்னையில் அமமுக செயற்குழு கூட்டத்தை நடத்தவுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பிறகு இந்த செயற்குழு நடைபெறவுள்ளதால் அது குறித்தும் எதிர்கால கட்சியின் பாதை குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.
அதேபோல் அமமுகவிலிருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் மிக எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமமுக கட்சியானது முக்கியப் பிரமுகர்களின் விலகலால் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமமுக செயற்குழுவானது முதலில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, தேதியை மாற்றி 20ஆம் தேதி நடைபெறும் என மறு அறிவிப்பு வெளியிட்டார். இதனிடையே அமமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி நிர்வாகிகளுக்கு தினகரன் சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமமுக செயற்குழுவில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இல்லையென்றால் உள்ளே அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த செயற்குழுவில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தினகரன் முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications