மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்!
சென்னை: சென்னை தியாகராயநகர் இல்லத்தில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.
வருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அதிரடி காட்டிய சசிகலா
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானவுடன் அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று யூகங்கள் பறந்தன. சசிகலாவின் பெங்களுரு டூ பெங்களூரு பயணம் இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியது. பின்னர் சென்னை வந்த சசிகலா மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

பகீர் அறிவிப்பு
ஆனால் யூகங்கள் எல்லாம் மறைந்து போகும் வகையில், அரசியலில் இருந்து நான் விலகுகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், அம்மாவின் பொற்கால ஆட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அ திமுகவுக்கு ஆதரவுகாட்டி சென்றார் சசிகலா. இதனை சற்றும் எதிர்பாராத டிடிவி தினகரன் மிகவும் அப்செட்டானார்.

தேர்தலில் வெற்றி பெறுவோம்
இந்த நிலையில் சென்னை தியாயராயநகர் இல்லத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை. மக்களின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். மார்ச் 8, 9-ம் தேதிகளில் நேர்காணல் நடக்க இருப்பதால் மார்ச் 7-ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும்.

வேட்பாளர்கள் அறிவிப்பு
ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வருகிற 9-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் .வருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது. மக்கள் எங்களை நிராகரிக்கும் வரையில் அரசியலில் இருப்போம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு.. டிடிவி தினகரன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications