மோதலுக்கு நடுவே..சென்னை மீனவர்களின் வலையை சேதப்படுத்திய துருக்கி சரக்கு கப்பல்.. என்ன நடந்தது?
சென்னை: நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் துருக்கி நாட்டின் சரக்கு கப்பல் சென்னை திருவொற்றியூர் மீனவர்களின் வலையை கடலில் சேதப்படுத்தி சென்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவு நன்றாக இல்லை. துருக்கி எப்போதும் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானும், துருக்கியும் நட்பு நாடுகளாக உள்ளன.

சமீபத்தில் கூட நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் நம் நாடு ஏவுகணை மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு, துருக்கி உதவியது. இதனால் நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் அதிக விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சென்னை அருகே கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை துருக்கி சரக்கு கப்பல் சேதப்படுத்தி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் எழிலரசன். இவர் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க பைபர் படகில் சென்றார். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது துருக்கி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் கடலில் பயணித்துள்ளது. இந்த கப்பல் பைபர் படகை மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் மீனவர்கள் பயந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த கப்பல், திருவொற்றியூர் மீனவர்களின் பைபர் படகின் மீது மோதவில்லை. மாறாக கடலில் மீனவர்கள் போட்டு இருந்த வலைகளை சேதப்படுத்தி சென்றது.
கடலில் வலை போடப்பட்டு இருப்பதாக மீனவர்கள் எச்சரிக்கை செய்தும் மூட துருக்கி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் கேட்கவில்லை. இதனால் மீனவர்கள் வலையை இழந்துள்ளனர். வலைகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து கடலில் இருந்து வீடு திரும்பிய மீனவர்கள் சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறையில் புகார் செய்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications