தபால் நிலையத்தின் சூப்பர் சேமிப்பு திட்டம்.. 1 லட்சம் முதலீடு.. சில ஆண்டுகளில் 2 லட்சம் ரிட்டர்ன்!
சென்னை: மத்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் தங்கள் கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை எந்தவித அச்சமுமின்றி முதலீடு செய்ய இது ஒரு பாதுகாப்பான இடமாக உள்ளது.. இதற்கு பல காரணங்கள் உள்ளன.. அவைகளை இங்கு சுருக்கமாக பார்ப்போம்..!!!
கிசான் விகாஸ் பத்திரம் திட்டமானது, சந்தை அபாயங்கள் எதுவுமே இல்லாமல் இந்திய அரசின் நேரடி உத்தரவாதத்துடன் கூடியது... அதனால்தான் இந்தத் திட்டம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..

வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் முதலீடு இரட்டிப்பாகும் காலம் அடிக்கடி மாறக்கூடியது.. தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சரியாக 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்கிறது..
கிசான் விகாஸ் பத்திரம்
உதாரணமாக நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை கிசான் விகாஸ் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வு கால முடிவில் எந்தவிதமான சிரமமுமின்றி 2 லட்ச ரூபாயாகத் திரும்பப் பெறலாம்.. தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத வட்டி விகிதம் என்பது மற்ற சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் லாபகரமானதாக உள்ளது..
குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாயில் இருந்தே யார் வேண்டுமானாலும் இந்த சேமிப்பை தொடங்க முடியும்.. அதிகபட்ச முதலீட்டுக்கு எந்தவிதமான உச்ச வரம்பும் இல்லை என்பது பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கூடுதல் சாதகமாகும்.
1 லட்சம் முதலீடு - டபுள் மடங்கு லாபம்
இந்த திட்டத்தில் இணைவதற்கு 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் தகுதியானவர்கள்.. தனியாகவோ அல்லது 3 நபர்கள் வரை இணைந்தோ கூட்டுக்கணக்காகவும் இதனை தொடங்கலாம்.. மேலும் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பாதுகாவலர்கள் மூலமாகவும் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது..
அவசர காலங்களில் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடியின் போது இந்தக் கிசான் விகாஸ் பத்திரத்தை ஒரு சொத்தாகக் கருதி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது.. ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெற விரும்பினால் முதலீடு செய்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு சில நிபந்தனைகளுடன் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரு தபால் நிலையத்திலிருந்து இந்தியாவின் எந்த பகுதியியிலும், இன்னொரு தபால் நிலையத்திற்கும் உங்கள் அக்கவுண்ட்டை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.. அதேபோல் ஒரு நபர் தனது கணக்கை வேறொரு நபரின் பெயருக்கு மாற்ற விரும்பினாலும் அதற்கும் உரிய வழிமுறைகள் உள்ளன..
சூப்பர் சேமிப்பு திட்டம்
வட்டிக்கு வரி உண்டு என்றாலும் பங்கு சந்தை போன்ற சிக்கல்கள் ஏதுவுமே இதில் கிடையாது.. வருங்காலத் தேவைகளான குழந்தைகளின் உயர்கல்வி அல்லது திருமண செலவுகளுக்குத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு சூப்பரான நிதித் தீர்வு என்றே சொல்லலாம்.
அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி இருப்பதால் பொதுமக்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி தங்கள் சேமிப்பை தொடங்கலாம்.. ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து மிக எளிதாக பணத்தை பெருக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications