சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் வெளிநாட்டில் வயாகராவுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதிக்கும் தொடர்பு?
சென்னை: வெளிநாட்டில் வயாகரா போட்டுக் கொண்டு ஆட்டம் போட்ட ஒரு அரசியல் பிரமுகருக்கும் சித்ராவின் மரணத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்ராவின் மரணம் தொடர்பாக அன்றாடம் ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றன. இறந்த பிறகும் தன் மகள் மீது சேற்றை வாரி வீசுகிறார்களே என ஒரு பக்கம் அவரது குடும்பத்தினர் நியாயமாக ஆதங்கப்பட்டிருந்தாலும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கமும் பலருக்கு உள்ளது.
இதனால் சித்ராவின் நண்பர்கள், ஹேமந்தின் நண்பர்கள் என தங்களுக்கு தெரிந்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்து வருகிறார்கள்.

சித்ரா மரணம்
அந்த வகையில் நக்கீரன் எனும் புலனாய்வு நாளிதழும் சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க தனக்கு தெரிந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் சித்ராவின் மரணத்திற்கு இரு மாஜி அமைச்சர்கள் காரணம், அவர்கள் எந்த மாவட்டத்தினர் என்பதை நாம் செய்தியாகவே வெளியிட்டிருந்தோம்.

வயாகரா மாத்திரை
இந்த நிலையில் சித்ராவின் மரணத்தில் ஒரு அரசியல்வாதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாட்டில் வயாகரா எனும் மருந்தை சாப்பிட்டுவிட்டு விபச்சார அழகிகளுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதி ஒருவருக்கும் சித்ராவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சி
இந்த தகவல் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரா மரண வழக்கு விசாரணைக்கு வரும் போது ஹேமந்த்திடம் விசாரணை நடத்தி சித்ராவின் சாவுக்கு காரணமானவர்கள் யார் என கேட்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகளை அவரது தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை
தினந்தோறும் சித்ரா மீது வரும் புதிய புதிய விரும்பத்தகாத தகவல்களை கேட்கவே மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் இந்த வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன. சித்ரா மரணம் குறித்த நீதிமன்ற விசாரணை விரைவில் வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications