கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை தவெக ஆர்ப்பாட்டம்.. அதிமுக, பாஜகவை தொடர்ந்து களத்தில்!
கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை (நவம்பர் 4) கோவையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, அதிமுக சார்பில் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவும் களத்தில் இறங்கி உள்ளது.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து கார் ண்ணாடியை உடைத்து, அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்து விட்டுத் தப்பினர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை (நவம்பர் 4) கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே நாளை பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு தலைகுனியும் அளவிற்கு கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்: 04-11-2025 செவ்வாய்கிழமை
நேரம்: மதியம் 12 மணி முதல்
இடம்: செஞ்சிலுவை சங்கம், பந்தயச்சாலை, கோவை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை, கோவை கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) November 3, 2025
நாள்: 04-11-2025 செவ்வாய்கிழமை
நேரம்:காலை 11 மணிக்கு
இடம்: செஞ்சிலுவை சங்கம் pic.twitter.com/7dtlJ2UozE
முன்னதாக தவெக தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்." என விஜய் வலியுறுத்தினார்.
இதேபோல, கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்தும் அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 4.11.2025 செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த வலியுறுத்தப்பட்டதுடன், குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல சட்டம் இயற்ற வேண்டும் என்றும், திமுக அரசு பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நவம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.
-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications