திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தவெக அரசு மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக போல காழ்ப்புணர்ச்சி காட்டாமல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற வேண்டும் என்று, நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், இந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை, முந்தைய தி.மு.க அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய த.வெ.க அரசின் நிலைப்பாடு குறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வரும், 22 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, த.வெ.க அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை, தமிழக மக்களிடம் தெளிவுபடுத்தும்.
எனவே, 'இது அனைவருக்குமான அரசு' என்று முழங்கிய முதல்வர் விஜய், இந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும். போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த தி.மு.க.,வை போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்து, தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, த.வெ.க அரசு, முந்தைய தி.மு.க., அரசை போல, மொழி, இனம் மற்றும் அரசியல் சாயங்கள் பூசி, பிரிவினைவாதம் செய்யாமல், தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை முழுதுமாக செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முந்தைய திமுக அரசு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், நடைமுறையைக் காரணம் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி!












Click it and Unblock the Notifications