தவெக சார்பில் இன்று இப்தார் நோன்பு! ஒரு நாள் முழுக்க நோன்பிருக்கும் விஜய்! ப்ளூ பிரிண்ட்டும் ரெடியாம்!
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி தவெக சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விஜய் பங்கேற்கிறார்.
ரமலான் நோன்பு இந்த மாதம் 2ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நோன்பு இருந்து கூட்டு பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் இப்தார் நோன்பு அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது போல் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொள்கிறார்.
சுமார் 3 ஆயிரம் பேர் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. இன்று விஜய்யும் ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் வழிமுறைபடி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக் கொள்கிறார்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மசூதிகளின் நிர்வாகிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. யார் எங்கு அமர வேண்டும், விஜய்யின் இருக்கை எது என்பது குறித்தெல்லாம் ப்ளூ பிரண்ட்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications