Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் பையில் கத்தரிக்கோல்.. தனி விமானத்தில் அனுமதி மறுப்பு.. சிபிஐ விசாரணைக்கு புறப்பட்டபோது பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேக்கில் கத்தரிக்கோல் இருந்தது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் தவெக பிரசார கூட்டம் நடந்தது.

tvk-leader-vijay-creates-controversy-after-he-posses-scissors-in-his-bag-when-leaving-cbi-inquiry-fr

இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 41 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக விஜயிடம் 2 முறை சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில் தான் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அ்னுப்பி வைக்கப்பட்டது. வேட்பாளர்கள் நேர்க்காணல் இருந்ததால் அவர் காலஅவகாசம் கோரினார். இதையடுத்து நாளைய தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ கேட்டு கொண்டது. இதையடுத்து நாளைய விசாரணைக்காக விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

இதற்காக அவர் சென்னையில் உள்ள விமான நிலையத்துக்கு காரில் வந்தார். அதன்பிறகு அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விஜயின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில் கத்தரிக்கோல் இருந்தது. விமானத்தில் கத்தரிக்கோல் உள்பட கூர்மையான பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது.

இதனால் விஜய் தனி விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அவரை காத்திருக்க வைத்தனர். அந்த கத்தரிக்கோல் எதற்காக விஜய் தனது பையில் வைத்திருந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. தெரியாமல் இருந்ததா? இல்லை வேறு காரணங்களுக்காக விஜய் எடுத்து சென்றாரா? என்பது தெரியவில்லை. கத்தரிகோல் பறிமுதல் செய்யப்பட்டது.

பிறகு விஜய் பையில் எந்த ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு விஜய் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு விஜய் ர் தனி விமானத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் தனி விமானம் அரை மணிநேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

விஜயுடன் தவெக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், விஜயின் உதவியாளர் ஜெகதீஷ், டிரைவர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+