விஜய் பையில் கத்தரிக்கோல்.. தனி விமானத்தில் அனுமதி மறுப்பு.. சிபிஐ விசாரணைக்கு புறப்பட்டபோது பரபரப்பு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேக்கில் கத்தரிக்கோல் இருந்தது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் தவெக பிரசார கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 41 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக விஜயிடம் 2 முறை சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
இந்நிலையில் தான் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அ்னுப்பி வைக்கப்பட்டது. வேட்பாளர்கள் நேர்க்காணல் இருந்ததால் அவர் காலஅவகாசம் கோரினார். இதையடுத்து நாளைய தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ கேட்டு கொண்டது. இதையடுத்து நாளைய விசாரணைக்காக விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
இதற்காக அவர் சென்னையில் உள்ள விமான நிலையத்துக்கு காரில் வந்தார். அதன்பிறகு அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விஜயின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில் கத்தரிக்கோல் இருந்தது. விமானத்தில் கத்தரிக்கோல் உள்பட கூர்மையான பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது.
இதனால் விஜய் தனி விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அவரை காத்திருக்க வைத்தனர். அந்த கத்தரிக்கோல் எதற்காக விஜய் தனது பையில் வைத்திருந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. தெரியாமல் இருந்ததா? இல்லை வேறு காரணங்களுக்காக விஜய் எடுத்து சென்றாரா? என்பது தெரியவில்லை. கத்தரிகோல் பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு விஜய் பையில் எந்த ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு விஜய் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு விஜய் ர் தனி விமானத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் தனி விமானம் அரை மணிநேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
விஜயுடன் தவெக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், விஜயின் உதவியாளர் ஜெகதீஷ், டிரைவர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்














Click it and Unblock the Notifications