தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: புதிதாக தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளார். தவெகவில் புதிதாக இணைபவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம் என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், தவெகவினர் புதியவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளதோடு, அக்கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். இன்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இணைந்துள்ளார்.

அதேபோல் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் இணைந்துள்ளார். இதனால் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் என பலரும் நம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
ஏற்கனவே தவெகவுக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நம் கட்சியினர் உழைத்து வருகின்றனர். அதனால் புதிதாக வந்தவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை கைவிடவும் மாட்டோம். புதியவர்களுடன் ஏற்கனவே கட்சியில் இருப்பவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தவெகவினருக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால், அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால், அடுத்த வினாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார். அதனால் எந்தக் காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம்.
ஊழல் செய்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவையே எங்களின் நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் பணியாற்ற போகிறோம். கட்சி நிர்வாகிகள் தொகுதியில் இருக்கும் பிரச்சனையை அமைச்சர்களிடம் கூறுங்கள்.
உடனடியாக அந்த பிரச்சனையை அமைச்சர்கள் சரி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் சூழலில், அதற்கான பணிகளை தவெக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருக்கும் பல்வேறு தரப்பினரையும் தவெக இணைத்து வருவதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications