சனாதனவாதி சுதா சேஷய்யன்.. தமிழ் பேசுவார் என்பதற்காக இந்த பதவியை கொடுக்கலாமா? வேல்முருகன் கொதிப்பு!
சென்னை: "மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, சுதா சேஷய்யனை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்." என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.

மருத்துவர் சுதா சேஷய்யன் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியையாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகளில் பங்கேற்றுள்ளார்.
மத்திய பாஜக அரசு நடத்திய காசி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் இந்தியில் பேசியவர் சுதா சேஷய்யன். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இரு மொழிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சுதா சேஷய்யன். இந்நிலையில், சுதா சேஷய்யன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் செம்மொழித் தமிழின் தொன்மை, தனித் தன்மை, அவற்றின் மரபுத் தொடர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யனை நியமித்து, அதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளது.
சுதா சேஷய்யன் அடிப்படையில் ஒரு மருத்துவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவை தவிர, சுதா சேஷய்யன், பட்டிமன்ற பேச்சாளர். ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரால் சனாதன கருத்துகளை பரப்புகின்ற சனாதனவாதி. மேடையில் அவர் நன்றாக தமிழ் பேசுகிறார் என்பதற்காக, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷய்யனை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது.
மத்திய அரசின் இத்தகைய உத்தரவு என்பது தமிழறிஞர்களை அவமதிக்கும் செயல். தமிழ் ஆய்வாளர்களை இழிப்படுத்தும் நடவடிக்கை. சுதா சேஷய்யன் தமிழறிஞர் கிடையாது. தமிழ் ஆய்வாளர் கிடையாது. மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, ஒரு மருத்துவத்துறையைச் சேர்ந்தவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. மத்திய அரசின் காசி சங்கமத்தை ஒருங்கிணைத்து நடத்தியதற்காக, சுதா சேஷய்யனுக்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிற பரிசா?
சுதா சேஷய்யன் நன்றாக தமிழ் பேசுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தமிழர்களின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்து அவர் அறிந்திருக்க முடியாது. அதற்கான அறிவுத் திறனும் அவருக்கில்லை. எனவே, செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோடு, தகுதியான ஒருவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்." என்று வலியுறுத்தி உள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications