Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாரும் எனக்காக ஒரு நிமிஷம் எழுந்து நில்லுங்க ப்ளீஸ்.. பேசி கொண்டிருக்கும் போதே விஜய் செய்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே விஜய் உரையாற்றினார். மாநில மாவட்ட அளவிலான கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாகிகள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து உறுதிமொழி ஏற்க செய்தார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, க்யூஆர் குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

TVK Party Workers Meeting

தவெக செயல்வீரர்கள் கூட்டம்

அந்த அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் தவெகவுக்கு 'விசில்' சின்னத்தை ஒதுக்கிய நிலையில், விஜய் மேடைக்கு வந்தபோது தொண்டர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கும், கொள்கைத் தலைவர்களுக்கும் விஜய் அஞ்சலி செலுத்தினார். இந்தக் கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

விஜய் உரை

வழக்கம்போலவே உணர்ச்சிவசப்பட்டும் நேரடியாகவும் பேசிய விஜய், "நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அப்படியெல்லாம் இல்லை. இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு அடங்கிப் போகிற ஆளா நான்? அழுத்தம் இருக்கிறதா என்றால், அழுத்தம் உள்ளது. ஆனால் அது நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் இன்று கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக மீது விமர்சனம்

அதனால்தான் மக்கள் தவெகவை நம்புகிறார்கள். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார்; இவருடன் யார் வரப் போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். 30 ஆண்டுகளாக என்னை குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால் மக்கள் எப்போதும் சரியாக மதிப்பிட்டிருக்கிறார்கள் நான் ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன். மக்கள் எனக்கென்று இருக்கிறார்கள். பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது.

திமுக

திமுக ஒரு தீய சக்தி. தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும் யாரென்ன சூழ்ச்சி செய்தாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அடங்கிப் போக மாட்டேன் என்றும், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் தங்களது அரசியலை சமரசம் செய்து கொள்ளக் கூடாது" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தவெக நிர்வாகிகள் உறுதிமொழி

நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நிர்வாகிகள் அனைவரையும் எனக்காக ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள் என சொன்ன விஜய் தான் சொல்லும் உறுதி மொழியை அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார் பின்னர் " இந்த 2026 சட்டமன்ற தேர்தலில், நாம எல்லாரும் உண்மையாக உழைப்போம். சத்தியமாக உழைப்போம். உறுதியாக உழைப்போம். ஒற்றுமையாக உழைப்போம்" என உறுதிமொழி ஏற்க சொல்லிவிட்டு அமர வைத்தார். குறிப்பாக ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளதன் மூலம் கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசல்களால் விஜய் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால்தான் ஒற்றுமையுடன் அவர் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+