போராட்டம் சமரசமின்றி தொடரட்டும் தோழர்.. பெ. சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், மக்களுக்கான போராட்டம் வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கோ. பாலகிருஷ்ணன் இருந்தார். எனக்கு அடுத்த மாதத்துடன் 72 வயதாகிறது. கட்சி விதிகள்படி 72 வயதைக் கடப்பவர்கள் பதவியில் இருக்கக் கூடாது. எனவே எனக்கு இந்தப் பதவி வேண்டாம். இதில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அந்தக் கட்சியின் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. பாலகிருஷ்ணனின் முடிவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஆலோசனை செய்தனர். அதில் ஒருமித்த முடிவாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியும், வாச்சாத்தி விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டவருமான பெ.சண்முக புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுவுடைமை கொள்கை, சாமானிய மக்களுக்கான அரசியல், போராட்டம் என்று செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடந்த சில ஆண்டுகளாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இணைந்து பதவிக்காக தங்களின் அடையாளத்தை படிப்படியாக இழந்து வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சண்முகம் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். "மதவெறி சக்திகளை எதிர்க்கும் தி.மு.க-வுடன் தொடர்ந்து பயணிப்போம். போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை. எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. தி.மு.க வெளிச்சத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல." என்று கூறியிருந்தார்.
அவரின் பேச்சு அரசியல் ரீதியாக ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த சண்முகம் மாநிலச் செயலாளர் பதவிக்கு வந்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அதன்படி சண்முகத்துக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் சண்முத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்." என்று கூறியுள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications