விஜய் திணறிட்டாராமே.. சரியான நேரத்தில் சீனுக்குள் வரும் அமித் ஷா.. ரெடியான ரிப்போர்ட்.. என்ன ஆகும்?
சென்னை: கரூர் வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற ரிப்போர்ட் ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமர்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமித் ஷா இந்த விவகாரங்களை தீவிரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
சிபிஐ என்பது தனி அமைப்பு அல்ல. அது டெல்லி போலீசாரின் கீழ் உள்ள அமைப்பு. டெல்லி போலீசார் அங்கு மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் அமைச்சர் அமித் ஷா.. சிபிஐ விசாரணை குறித்த அப்டேட்களை ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில்தான் கரூர் வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற ரிப்போர்ட் ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமர்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக விஜயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அவர் சொன்ன பதில்கள் பற்றிய ரிப்போர்ட் அமித் ஷாவிடம் செல்ல போவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த விசாரணையில் கொஞ்சம் திணறிவிட்டதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு சிக்கல்
முக்கியமாக கரூர் வழக்கில் விஜய் சாட்சி என்பதில் இருந்து சந்தேகத்திற்கு உரியவராக மாறி உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது.
விஜய் அளித்த பதில்களே இதற்கு காரணம். முக்கியமாக திருச்சியில் இருந்து விஜய் கரூர் வர தாமதம் ஆனது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. இதற்கு விஜய் ரோடு வளைவு நெளிவாக இருந்தது என்று கூறி உள்ளார். அந்த சாலையில் தேசிய ஹைவே இருந்தும் கூட விஜய் இதை கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதற்கு சிபிஐ.. உங்கள் வாகனம் 1 மணி நேரம் இடையில் நின்று இருக்கிறது. உங்கள் போன் சாட்டிலைட் தகவல்கள், அதை உறுதி செய்கின்றன. உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராத நேரத்தில் நீங்கள் போனில் பேசி உள்ளீர்கள். அதற்கான ரெக்கார்ட் உள்ளது. அந்த 1 மணி நேரம் ஏன் வாகனத்தை நிறுத்தி இருந்தீர்கள்? எங்கே இருந்தீர்கள்? என்று சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது.
விஜய் - சிபிஐ விசாரணை
இதன் காரணமாகவே witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது. கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நடந்த சிபிஐ விசாரணையில், சம்பவம் நடத்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக சென்றது ஏன்? கீழே பிரச்சனை நடப்பது உங்களுக்கு தெரியாதா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? அவ்வளவு கூட்டம் இருந்த போது அதற்குள் ஏன் வாகனத்தை கொண்டு சென்றீர்கள்?
நெரிசல் அபாயம் இருப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? கீழே பிரச்சனை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? போலீஸ் வேண்டாம் என்று சொன்ன போதும்.. அதை மீறி உள்ளே ஏன் சென்றீர்கள்? என்று சிபிஐ இன்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? கீழே ஆம்புலன்ஸ் வரும் சூழல் இருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ஆம்புலன்ஸ் வரும் போதே ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை? நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? என்றெல்லாம் சிபிஐ கேள்விகளை எழுப்பி உள்ளது.
விஜய் அளித்த பதில்
கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் அளித்த பதிலில்.. நான் போலீஸ் அளித்த விதிப்படியே நடந்து கொண்டேன். இதில் விதிகளை எங்கும் மீறவில்லை. போலீஸ் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என்று போலீஸ் மீது திருப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? என்று சிபிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம்












Click it and Unblock the Notifications