Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கே போனார் விஜய்.. தவெக 2 ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணலிலும் ஆப்சென்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே வேட்பாளர் நேர்காணல் முடிந்துவிட்டது. தவெகவில் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெற்றது இந்த நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

tvk-vijay-tvk-candidates-second-face-interview-to-be-held-today-at-panaiyur

தவெக இரண்டாம் கட்ட நேர்காணல்

ஆனால் தவெக தரப்பில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் நிலவுகிறது. தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்.

சுமார் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் செய்தார்.து, எல்லாவற்றையும் வந்துவிட்டேன். இனி எனக்கு எல்லாமே அரசியல் தான் என்று விஜய் உருக்கமாக பேசியதாக தகவல் வெளியானது. புதுச்சேரி வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் நேர்காணல் செய்தனர். அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் இன்று நடைபெற்றது.

விஜய் ஆப்சென்ட்

தவெக வேட்பாளர் தேர்வு செய்யும் பொறுப்பு புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்நறு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்

அவர்களிடம் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் நேர்காணல் செய்கின்றனர். இன்றைய நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. நேற்றைய புதுச்சேரி நேர்காணலில் விஜய் கலந்து கொள்ளாததற்கு தவெகவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இன்றைய நிகழ்விலும் அவர்கள் கலந்து கொள்ளாதது நிர்வாகிகளிடம் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் தவெகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றால் பெரும் விமர்சத்துக்கு ஆளாவார் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+