ஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை
கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் தேனி அதிமுக குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: ஓட்டு போட சொல்லி தந்த பணத்தை அதிமுகவினர் திரும்பி வாங்கிட்டாங்களே என்று புலம்பிய பாக்கியம் என்ற பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காக ஓபிஎஸ், பணத்தை வாரி வாரி இறைக்கிறார் என்றும், தெருவெல்லாம் பணம் சிதறிக்கிடக்கிறது என்றும் ஏற்கனவே அமமுக தங்கதமிழ்செல்வன் கூறியிருந்தார்.
அதேபோல, பணப்பட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றதில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் பதிலுக்கு அதிமுகவினர் அமமுகவினர் மீது சாடினார்கள்.
|
அதிமுக
இப்படி ஒருவருக்கொருவர் சேற்றை வாரி வாரிபூசிக் கொண்ட நிலையில், தேனியில் நேற்றில் இருந்து ஒரு விஷயம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாக்களிக்கவில்லை
அதிமுகவிற்கு யாரும் வாக்களிக்கவில்லை என்றும், அதனால் பணத்தை திரும்ப தரும்படி அதிமுகவினர் மக்களிடம் கேட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். இது வெறும் பேச்சாக மட்டுமில்லாமல், புகாராக அதுவும் பேட்டியாக வெடித்துள்ளது.

புலம்பிய பாக்கியம்
பாக்கியம் என்ற பெண் செய்தியாளர்களை அழைத்து "ஓட்டு போடவில்லை என்று கூறி அதிமுகவினர் எனக்கு கொடுத்த 1000 ரூபாயை திரும்ப கேட்கிறார்கள், கேட்டபடியே நானும் பணத்த திரும்ப தந்துவிட்டேன்" என்று புலம்பி தள்ளினார். கொடுத்த பணத்தை வாங்கி கொண்ட கோபமோ என்னவோ, பாக்கியம் புலம்பி தள்ளியதுதான் இன்றைக்கு ஹைலைட்!!

ஊக்கத்தொகை
இதுதொடர்பான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அப்பெண், அதில், "வாக்கு சேகரிப்பின்பொழுது ஊக்கத்தொகை கொடுத்த தேனி அதிமுகவினர் திரும்பவும் அந்த தொகையை 'கேட்டு பெற்ற' உயரிய அரசியல் சம்பவம். வாழ்க ஜனநாயகம்! வாழ்க அதிமுகவின் 'பெருந்தன்மை'! நல்ல கோவம் பா இரட்டை இலை பாட்டிக்கு" என்று கிண்டல் அடித்துள்ளார் ஒரு பெண்.












Click it and Unblock the Notifications