எலான் மஸ்க் அதிரடி! ட்விட்டரில் இனி 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும்! வந்தது ஷாக் கட்டுப்பாடு
சென்னை: ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தனியார் நிறுவனமாக பங்குசந்தையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை மொத்தமாக எல்லா பங்கிற்கு காசு கொடுத்து வாங்கினார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து பல இந்தியர்கள் உட்பட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பும் நீக்கப்பட்டது.
இந்த விவகாரங்களுக்கு இடையில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.

கட்டுப்பாடு: ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 600 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 300 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது என்றார். அதன்பின் இதை இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 8,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 800 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 400 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு உயர்த்தப்பட்டு உள்ளது என்றார்.
தற்போது இது ம் முறையே 10000 , 1000, 500 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட அளவிற்கு டேட்டாக்களை எடுப்பதை எலான் மஸ்க் விரும்பவில்லையாம். இப்படி டேட்டாக்களை எடுத்து அதை வேறு இடங்களில் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக ஒரு ஏஐ உருவாக்குகிறார்கள் என்றால்.. அதில் புதிய தகவல்களை அப்டேட் செய்ய இது போன்ற ட்விட்டர் தகவலை பீட் செய்வார்கள். இதனால் ஏஐ உலகில் உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அது முழு அப்டேட்டுடன் இருக்க முடியும். இதைத்தான் டேட்டா ஸ்கிராப்பிங் என்பார்கள். இந்த டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களைப் பயிற்றுவிக்க ட்விட்டர் தரவைப் பயன்படுத்துவதை எலான் மஸ்க்கும் தனது போஸ்டுல் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இனி ட்விட்களைப் பார்க்க பயனர்கள் ட்விட்டர் தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று ட்விட்டர் அறிவித்து உள்ளது. இதற்கு முன் கணக்கு இல்லை என்றாலும் ட்விட் லிங்க் இருந்தாலே அதை பார்க்க முடியும். இனி அப்படி முடியாது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications