வன்முறை வேண்டாம்னுதானே ரஜினி சொன்னார்.. ரசிகர்கள் சப்போர்ட்.. டிரெண்டாகும் #IStandWithRajinikanth
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபக்கம் ஆதரவும் அதிகமாக உள்ளது ரஜினிக்கு ஆதரவாக #IStandWithRajinikanth என்ற பெயரில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் ஒருபக்கம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பலரும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு அவற்றை#IStandWithRajinikanth என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
|
வேதனை அளிக்கிறது
ரஜினி வன்முறை தீர்வு அல்ல என்று தானே சொல்கிறார். அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
வன்முறை வேண்டாம்
ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை, யாரையும் தவறாக பேசியிருக்கிறாரா, குடியுரிமை சட்டத்தை ஆதரித்திருக்கிறாரா? அரசியலால் ஏற்படும் வன்முறை வேண்டாம் என்றுதானே சொல்லியிருக்கிறார் என்று சரிகா ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
|
குரல் கொடுத்தது ரஜினி
தலைவர் ரஜினி ஒரு போதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது இல்லை. இலங்கை தமிழர்களுக்காக முதல்முறையாக குரல் கொடுத்தது ரஜினி தான். வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று தானே சொன்னார். இப்போதைய வன்முறைகள் நாட்டில் இருக்க வேண்டுமா? என்று ரஜினிகாந்த் பேன்ஸ் கிளப் கருத்து தெரிவித்துள்ளது.
|
பலவீனத்திற்காக வன்முறை
காந்தியின் புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் "அவர்களின் மனதை மாற்ற விரும்புகிறேன், ஆனால் பலவீனத்திற்காக அவர்களை வன்முறையால் கொல்ல விரும்பவில்லை, நாம் அனைவரும் அமைதியாக மனதை வைத்திருக்க வேண்டும்" ஒரு மேற்கோளையும் குறிப்பிட்டு மார்க் ஆண்டனி என்பவர் பதிவிட்டுள்ளார்..
|
எதிர்ப்பு ஏன்
எதிர் முகாமில் உள்ள ஒவ்வொருவரும் ரஜினியின் ட்வீட்டுக்கு தீவிரமான எதிர்ப்பை காட்டுவதை பார்க்கும் போது அரசியலில் தலைவரைப் பற்றி அவர்கள் எவ்வளவு பயந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று ஸ்ரீதர் என்பவர் பதிவிட்டுள்ளார்.
|
ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் போராட்ட பின்னணி என்று ஊடகங்களில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உண்மை ஒரு நாள் வெல்லும் என்று ரஜினிக்கு ஆதரவாக ஒருவர் கருத்து பதவிட்டுள்ளார்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications