பழிக்கு பழி - தாம்பரத்தில் பட்டப்பகலில் இரு இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை
சென்னை: சென்னை தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் தேவா. இவர் மீது அங்குள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி இருந்தன. தேவா தலைமையில் ஒரு ரவுடி கும்பல் மணிமங்கலத்தில் இயங்கி வந்திருக்கிறது. இதனிடையே, அதே பகுதியில் இருந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும், தேவா கும்பலுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் நள்ளிரவு தேவாவை எதிரணியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில் விக்கி (23), சுகன் (20) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை விக்கியும், சுதனும் மதுபோதையில் மணிமங்கலம் அருகே உள்ள பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், விக்கியையும், சுகனையும் கற்கள் மற்றும் இரும்பு ராடுகளால் கொடூரமாக தாக்கியது. இதில் நிலைக்குலைந்து விழுந்த இருவரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் விக்கியும், சுகனும் உயிரிழந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவா கொலைக்கு பழித்தீர்க்கவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும் கொலை...
சென்னையில் சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கடந்த வாரம் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரிலேயே கார்த்திக் ராஜா என்ற இளைஞர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications