போதைப் பொருள் விற்பனை வழக்கு... தெலுங்கானா, மகராஷ்டிரா குற்றவாளிகள் சென்னையில் கைது!
சென்னை: போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், சென்னையில் பதுங்கியிருந்த மும்பை, ஐதராபாத்தை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் முழுதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் சோதனைகள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பழைய எம்.பி.டி குடியிருப்பில், போதை பொருட்கள் விற்பனை செய்யவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற பார்த்த போது, ஆள்நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டில் சிலர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கபட்டது. போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்ப முயன்றனர். 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பிடிபட்டவர்கள் தெலுங்கான மாநிலத்தை சார்ந்த ரமேஷ் ஆய்தா, மஹாராஷ்ட்ராவை சார்ந்த பயாஸ் அஸமத் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த நபர்களிடமிருந்து, 80 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமின் என்னும் போதை பொருளும், சுமார் 15 கிலோ எடையுள்ள எபெட்ரைன் என்னும் போதை மருந்துக்கான மூலப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் விலை சுமார் 12 இலட்சம் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட ரமேஷ் ஆய்தா, ஏற்கனவே மெத்தபெட்டமின் போதைப் பவுடர் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீசார், வடசென்னை பகுதியில் மெத்தகேட்டமைன் போதை பவுடர் விற்பதற்கு மீண்டும் இங்கு வந்துள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications