அண்ணா பிறந்தநாள்- 322 கைதிகள் விடுதலை - 187 பேருக்கு மறுப்பு- வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ரிலீஸ்!
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 322 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 35 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகால சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 509 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

322 பேர் விடுதலைக்கு ஒப்புதல்!
ஆனால் 509 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பரிந்துரைத்த 509 பேரில் 322 பேரை மட்டும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்; 187 பேரை விடுதலை செய்யும் கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருக்கிறார்.

வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை
தற்போது ஆளுநரின் இந்த உத்தரவின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய 2 பேர் கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 1987-ம் ஆண்டு வனச் சரகர் சிதம்பரம் உட்பட 3 பேரை வீரப்பன் படுகொலை செய்தார். இந்த வழக்கில்தான் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையனும் கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் வயது மூப்பின் காரணமாக சிறை கைதியாக இருந்த நிலையிலேயே மாதையன் மரணம் அடைந்தார்.

முஸ்லிம் சிறை கைதிகள்
நீண்டகால சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பின் போது அச்சம்பவத்துக்கு காரணமான அல் உம்மா பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது. அல் உம்மாவின் தலைவர் பாஷா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி அரசு கோரிக்கை
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற
உத்தரவு படி,நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, 35ஆண்டுகளாக ஆயுள்சிறைவாசியாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன்,பெருமாள் இப்போது கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி.வீரப்பன் கூட்டாளிகளையடுத்து, அதே கோவை சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளையும் ஆளுனரின் கையெழுத்துக்காக காத்திருக்காமல், தமிழ்நாடு முதல்வர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications