'சர்கார்' ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு சபாஷ்.. தமிழக தேர்தல் களத்தில் முதல் புரட்சி!
Recommended Video
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, சர்கார் திரைப்படத்தில், கள்ள ஓட்டுக்கு எதிராக போராடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான 49- பி சட்டப்பிரிவு தொடர்பாக விளக்கம் இடம் பெற்றிருக்கும்.
இந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இதேபோன்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி இரு வாக்காளர்கள் பலன் பெற்றுள்ளார்கள். இதற்காக வாக்காளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவர் டீமுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.
சர்கார் திரைப்படம் பார்க்காதவர்கள் சொற்பமே. எனவே 49- பி சட்டப்பிரிவு தொடர்பான காட்சிகளை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

விழிப்புணர்வு
இந்த திரைப்படம் வெளியான பிறகு, வாக்காளர்களிடம், 49- பி சட்டப்பிரிவு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, அதிகாரிகளிடம் தங்கள் வாக்குகளை போராடி பெற்று அளிக்க தொடங்கியுள்ளனர், வாக்காளர்கள். நெல்லை மாவட்டம் பணகுடியில், வாக்குசாவடி எண் 48ல் மணிகண்டன் என்ற வாக்காளரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார்.

இருவர்
இதையடுத்து, மணிகண்டன், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அப்போது 49- பி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு, மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு ஏற்பாட்டின்பேரில், மணிகண்டன் வாக்களித்தார். இதேபோல பூந்தமல்லியில் ஒரு பெண்மணியும் 49-பி சட்டத்தை பயன்படுத்தி ஓட்டுப் போட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம்
ஆனால், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட மீனவ கிராமங்களில் ஏராளமானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதில் சஜின் என்பவர் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டது. அவர் கேட்டுப் பார்த்தும், 49-பி பிரிவில் வாக்களிக்க அவகாசம் செய்து தரப்படவில்லை.

கூடுதல் விழிப்புணர்வு அவசியம்
49- பி தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான், அதிகாரிகள் இதை எள்ளளுடன் கடந்து செல்லும் சூழல் வராது. அதன்பிறகு, கள்ள ஓட்டு பிரச்சினைக்கு முடிவு கட்ட வாய்ப்பு ஏற்படும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications