உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு! இஸ்லாம் இதை போதிக்கவில்லை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: நபிகளார் மீதான அன்பு என்ற போர்வையில் ராஜஸ்தான் மாநிலன் உதய்பூரில் தையல் கடைக்காரர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
முஹம்மது நபிகளார் அவர்கள், தன்னை நிந்தித்தவர்களை கூட பொறுமையாலும், அன்பாலும் வென்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் ஒருவர் தலை வெட்டப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.''
''முஹம்மது நபிகளார் அவர்கள், தன்னை நிந்தித்தவர்களை தனது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான எந்த தொந்தரவையும், தீங்கையும் அளிக்கவில்லை. தன்னைத் தாக்கிய மக்களை நபிகளார் சபிக்கவும் இல்லை, இந்த சூழலில் நபிகளார் மீதான அன்பு என்ற போர்வையில் தையல் கடைக்காரரை படுகொலை செய்து அதனை சமூகவலை தளத்தில் பரப்பியவர்கள் காட்டுமிராண்டித் தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.''
''இது முற்றிலும் அராஜகமான செயல். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. இஸ்லாமும் இதனைக் கண்டிக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒரே குரலில் இந்த அக்கிரமத்துக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக்கின்றது.''
''இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications