Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கன்பார்ம்டு".. மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி".. அழுத்தமாக சொன்ன உதயநிதி

சின்னசேலம் மாணவி விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 144 உத்தரவு

144 உத்தரவு

சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனிடையே மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் வர உள்ளது.. நேற்றைய கலவரத்தையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 காயத்ரி கேள்வி

காயத்ரி கேள்வி

மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. தமிழக பாஜக தலைவர்கள், இது தொடர்பாக ஆளும் அரசை தொடர்ந்து கண்டித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.. அந்த வகையில், நேற்றைய தினம், பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? என்று பாஜக வெளிநாடுவாழ் தமிழர் நலன் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியிருந்தார்..

 தண்டனை உறுதி

தண்டனை உறுதி

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி.. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - அன்பில் மகேஷ்
     அனிதா - திமுக

    அனிதா - திமுக

    உதயநிதியின் இந்த ட்வீட்டுக்கு, வழக்கம்போல் பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.. மாணவி உயிரிழந்து 5 நாட்கள் ஆன நிலையில், இந்த மரணச் சம்பவம் பெரும் கலவரமாக ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் வந்து உதயநிதி கருத்து சொல்லி உள்ளார் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 5 நாட்களாக எங்கே போனீங்க உதயநிதி? அனிதா மட்டும்தான் திமுகவுக்கு ஞாபகம் இருக்கா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+