தொகுதி மக்களுக்கு பரிசு மழை பொழியும் உதயநிதி ஸ்டாலின்! ஹாட் பாக்ஸ் -புத்தாடைகள் என நீளும் லிஸ்ட்!
தொகுதி மக்களை பரிசு மழையில் நனைக்கும் உதயநிதி
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு ஹாட் பாக்ஸ், புத்தாடைகள் என பரிசுப் பொருட்கள் வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.
பொங்கல் முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொடுத்து தொகுதி மக்களை குஷியாக வைத்துக் கொள்கிறார்.
சென்னையை பொறுத்தவரை துறைமுகம், சேப்பாக்கம் என இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம் தொகுதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை சென்னையில் இருக்கும் போது தனக்கு துறை ரீதியான பணிகள் இல்லாதபட்சத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் ஒரு ரவுன்ட் அடித்துவிடுவார். அதிகாரிகள், அலுவலர்கள் என அழைத்து ஒரு கூட்டத்தையும் நடத்தி விடுவார். அந்தளவுக்கு தொகுதியை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்வார் உதயநிதி ஸ்டாலின்.

பரிசுப் பொருட்கள்
இந்நிலையில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்றது. பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தொகுதியில் கட்சி சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹாட் பாக்ஸ், டிபன் பாக்ஸ், புத்தாடைகள் என பரிசுப் பொருட்களின் பட்டியல் நீள்கின்றன.

உங்களில் ஒருவன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசும் போது, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை நான் என மறக்காமல் குறிப்பிடுவார். அந்த வகையில் இன்று தனது தொகுதியில் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'என்றும் உங்களில் ஒருவராக இருந்து உழைத்திடுவேன்' என தாம் தனது தொகுதி மக்களிடம் உறுதியளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

2 தொகுதிகள்
சென்னையை பொறுத்தவரை துறைமுகம், சேப்பாக்கம் என இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் திமுக சார்பில் அதிகளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications