எந்த ஊர் இளவரசர் நீங்க.. உதயநிதி பேனரை பார்த்து குமுறிய நபர்.. உதயநிதியின் பதிலை பாருங்க!
உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது கட் அவுட் கலாச்சாரம் பெரிதாகி உள்ளது. அரசியல் நிகழ்வுகள் தொடங்கி அனைத்திற்கும் கட் அவுட் வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

இரண்டு கட்சிகள்
இதில் திமுக, அதிமுக என்று வித்தியாசம் இல்லாமல் கட்சிகள் கட் அவுட் வைக்கிறது. முக்கியமாக சென்னையில் இவர்கள் கட் அவுட் வைப்பது பெரிய இடைஞ்சலாக இருந்துள்ளது. இதற்காக சில திமுக நிர்வாகிகள் கட் அவுட்டை அகற்றி வருத்தம் தெரிவிக்கும் சம்பவங்களும் நடந்து இருக்கிறது.
|
என்ன விமர்சனம்
இந்த நிலையில் டிவிட்டரில் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் உள்ள கட் அவுட் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் ''எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்.'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
|
தவறுதான்
இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் ''தவறு.. மீண்டும் நடக்காது.. 🙏🏼'' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படி
ஏற்கனேவே சில நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது இனி அப்படி நடக்காது என்று உதயநிதி மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த கட் அவுட் பிரச்சனையில் இப்படி வெளிப்படையாக பேசி இருப்பதை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications