உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு!
சென்னை: முதல்வர் விஜய் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தை குறி வைக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்ட முதல் பெரிய ஊழல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 'வேலைக்கு லஞ்சம்' (Cash-for-Jobs) பிரம்மாண்ட முறைகேடு தொடர்பானது. சுமார் 2,538 அரசு பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. FIR-ல் கே.என்.நேருவுடன் சேர்த்து பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மிகப் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், அவரது வட்டாரத்தைச் சேர்ந்தவருமான ரத்தீஷ் பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதுதான்.
அரசியல் விமர்சகர்கள் இதை வெறும் ஊழல் வழக்காக மட்டும் பார்க்கவில்லை. தி.மு.கவின் அடுத்த தலைமை வரிசையை குறிவைத்து விஜய் அரசு நகர்த்திய அரசியல் காய் நகர்த்தலாகவும் இது விமர்சிக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் மாதத்தில் மத்திய அமலாக்கத்துறை (ED) கே.என்.நேரு இல்லம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒருவருக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக ED கூறியது. மொத்தம் 634 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தி.மு.கவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ரத்தீஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது, விஜய் அரசு உதயநிதிக்கு நேரடியாக 'செக்' வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை PMLA சட்டத்தின் கீழ் விசாரணையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.என்.நேரு, ரத்தீஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கைது நடவடிக்கை மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகள் உருவாக வாய்ப்புள்ளது. டெல்லி ED தலைமை அலுவலகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அனுமதி கிடைத்தவுடன் பல புதிய வளர்ச்சிகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், FIR-க்கு எதிராக கே.என்.நேரு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு ஜூன் 23 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது என்பதால், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு வழக்கின் போக்கு மாற வாய்ப்புள்ளது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை விஜய் அரசு தொடர்ந்து எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தி.மு.க தரப்பில் இதை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிக்கும் குரல்களும் வலுத்து வருகின்றன. தமிழக மக்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த FIR தமிழக அரசியலின் சமன்பாட்டை மாற்றியமைக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்த வழக்கு எத்தகைய புயலை உருவாக்கும் என்பதை ஜூன் 23-க்குப் பிறகுதான் முழுமையாக அறிய முடியும். தமிழக அரசியல் களம் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications