மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை முடியும் செய்யும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதமாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக யார் நின்றாலும் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் சார்பாக விசாரித்த போது, உதயநிதி ஸ்டாலின் இம்முறை திருவாரூர் தொகுதிக்கு மாறப்போவதாக தெரிய வந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நாளை திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடக்கவுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் சொன்ன பின் தொடங்குவோம். தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியாக மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். அதனால் தனியாக பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. திமுக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. சொல்லாத பலவற்றையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
காலை உணவுத் திட்டம் தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத ஒன்று. அதேபோல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், ட்டசபைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை முடியும் செய்யும். நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினின் பதில் விவாதமாகி இருக்கிறது.
-
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
விஜயை வறுத்தெடுக்கப் போகும் வீரத் தமிழச்சி.. திமுக மேடைகளில் ‘பிக் பாஸ்’ ஜூலி! திமுகவின் பலே ப்ளான்! -
திமுக கூட்டணியில் உள்ள 21 கட்சிகள் எவை எவை? இதுவரை 32 சீட் பங்கீடு ஓவர்! முழு லிஸ்ட்! -
“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல! ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!” - ஸ்டாலின் -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்! -
ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுலின் நம்பிக்கை நட்சத்திரம்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
கலைந்துவிடும் நிலைக்கு சென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம்.. என்ன நடந்தது? -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்!












Click it and Unblock the Notifications