தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை அறிவதற்காக அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினர், தங்களின் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது. மேலும், திமுக தலைமை உருவாக்கிய வெப் சைட்டில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பொது வெளியிலிருந்து பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறதாம். அந்த பதிவுகளையும் பிரிண்டு எடுத்து ஸ்டாலினின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, கட்சியின் உள்ளடி பிரச்னைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் வரலாறு காணாத பின்னடைவைச் சந்தித்த திமுக, இந்தத் தோல்வியின் உண்மையான காரணங்களைக் கண்டறிய உயர்மட்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தது.

mk stalin sekar babu

கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட 36 பேர் கொண்ட இந்த குழு, கடந்த ஒரு மாதமாக தீவிரமாகச் செயல்பட்டு, விரிவான இறுதி அறிக்கையை தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த ரகசிய அறிக்கையில் சென்னை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள பிரச்னைகள் இருந்தபோதிலும், சேகர்பாபு மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயக்கம் காட்டுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சியின் உள்ளார்ந்த அரசியல் சமநிலை மற்றும் எதிர்கால உத்திகளுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.

18 மாவட்டங்களில் ஒரு எம்.எல்.ஏ. கூட திமுகவுக்கு கிடைக்கவில்லை

இந்த நிலையில், திமுகவில் அமைப்பு ரீதியாக எப்போது மாற்றம் நிகழும் ? 18 மாவட்டங்களில் ஒரு எம்.எல்.ஏ. கூட திமுகவுக்கு கிடைக்காத நிலையில் மாவட்டங்களில் மாறுதல் செய்வார்களா? மாட்டார்களா? என்றெல்லாம் மாவட்ட திமுகவினரிடம் கேள்விகள் பரபரத்து கிடக்கின்றன.

இத்தகைய கேள்விகளுடன் அறிவாலயத்தரப்புகளில் விசாரித்த போது, ''கள ஆய்வு குழுவினர் கொடுத்த அறிக்கைகள், வெப் சைட்டில் பதிவான கருத்துக்கள் அனைத்தும் இரண்டாகப் பிரித்து உதயநிதியிடமும், சபரீசனிட மும் கொடுக்கப்பட்டுள்ளதாம். கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய பாயிண்டுகளை அவர்கள் அடி கோடிட்டு காட்டுவார்களாம். அவை கள திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள்

அதனை பார்வையிடும் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்யவும், கட்சியின் உயர் மட்டக் கூழுவைக் கூட்டி விவாதிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அந்த விவாதங்களுக்கு பிறகே கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரலாமா? அல்லது வேண்டாமா? என்பது முடிவாகும். அதனால் மாற்றங்கள் நடப்பது கால தாமதம் ஆகலாம்.

ஆனால், உதயநிதி மட்டும் சீக்கிரத்தில் செய்யுங்கள். இடைத்தேர்தலும், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகின்றன. அதனை எதிர்கொள்ள வேண்டுமானால் புதியவர்கள் கட்சி நிர்வாகத்துக்குள் குறிப்பாக மாவட்ட நிர்வாகத்துக்குள் வர வேண்டும். அப்படி வரும் போது, கட்சி பணிகளை முன்னெடுக்க அவர்களுக்கான கால அவகாசம் தேவைப்படும். அதனால், மாற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டால் விரைந்து செயல்படுத்துங்கள் என தலைவரிடம் சொல்லி வருகிறார்'' என்கிறார்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+