Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடுமலை சங்கர் கொலை... மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் வரும் நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

கெளசல்யா என்பவரை காதல் திருமணம் செய்தற்காக கடந்த 2016-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி சங்கர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Udumalai Sankar murder case final verdict tomorrow

மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து விசாரணையும் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை காலை இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+