மொத்தமாக எல்லாம் மாற போகுது.. இனி ரயில் பயணமே மாஸ்தான்.. அன் - ரிசர்வ் பெட்டிகளில் அதிரடி மாற்றம்
சென்னை: இந்தியாவில் இருக்கும் ரயில்களில் உள்ள அன் ரிசர்வ் பெட்டிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது.அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.
உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன. இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.

ஆனால் புக்கிங் செய்யாமல் ரயிலில் செல்லும் போது இது போன்ற சுகத்தை அனுபவிக்க முடியாது. முக்கியமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வது என்பது ரயிலில் மிக மிக கொடுமையானது. கூட்டம் நேரம் இல்லாத சமயங்களில் பிரச்சனை இல்லை.
ஆனால் அதிக கூட்டம் உள்ள போது ரிசர்வ் செய்யாமல் ரயிலில் செல்வது என்பது கொடுமையானது. இந்தியாவில் ஒரு பக்கம் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. வந்தே பாரத் உலக தரத்துடன் இருக்கின்றன. சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயிலில் ஏகப்பட்ட நவீன வசதிகள் உள்ளன. ரயில்களின் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்னமும் வசதிகள் எதுவும் இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. அதிலும் ரிசர்வ் இல்லாத கோச்சுகள் மிக மோசமாக காட்சி அளிக்கின்றன. மக்கள் மூச்சை பிடித்துக்கொண்டு, முண்டி அடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மாற்றம்: இந்த நிலையில்தான் இந்தியாவில் இருக்கும் ரயில்களில் உள்ள அன் ரிசர்வ் பெட்டிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் பெட்டிகளை நவீனமாக்கவும், உள்ளே இருக்கைகளை நவீனமாக்கவும், இருக்கைகளை சுத்தமாக வைத்து இருக்கவும் ஆலோசனைகளை செய்து வருகிறது.
அதேபோல் கழிப்பறைகளை சுத்தமாக வைத்து இருக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக ரிசர்வ் இல்லாத கோச்சுகளை அடியோடு மாற்றி அதற்கு புதிய லுக் கொடுக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தண்ணீர் வசதி தொடங்கி ஆட்டோமெட்டிக் கதவுகள், புதிய மின் விசிறிகள், விளக்குகள் உடன் இந்த புதிய வகை ரயில் பெட்டிகள் ரிசர்வ் இல்லாத கோச்சுகளுக்காக உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான டிசைனிங் முடிந்த பின் கட்டுமான பணிகள் அனுமதி பெற்று தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications