Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அடுக்குமாடியில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவருக்கு.. மனைவி தந்த மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பெண் ஒருவர் போலீசாரிடம் பேசும் போது, கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். கஞ்சாவே இல்லை.. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை பெண் இப்படி சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.

கள்ளக்காதலை தடுக்க வழி தெரியாமல் பலர் தடுமாறி வருகிறார்கள். கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் வேறு ஒரு துணையுடன் தொடர்பில் இருப்பது அதிகரித்து வருகிறது. சமூகத்தில் இதை இருவருமே வெளியில் சொல்லாமல் அப்படியே தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மைகள் தெரியவந்தால், சட்டப்பூர்வமாக மனைவி அல்லது கணவனை பிரிய முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் தடையாக இருந்தால், பின்னாளில் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கின்றன.

unforgettable gift given by wife to husband who was having fun with his girlfriend in Chennai

அதேநேரம் இந்த கள்ளக்காதலால் பாதிக்கப்படும், பெண் அல்லது ஆண்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த ஒரு பெரிய நிவாரணமும் உடனே கிடைப்பது இல்லை.. ஏனெனில் கள்ளக்காதலில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்ட ரீதியாக எந்த ஒரு நிவாரணமும் இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சூழலில் கையும் களவுமாக பிடித்து அடிப்பது, தண்டிப்பது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கிறது. சில இடங்களில் வேறு மாதிரி நடக்கிறது.. அப்படித்தான் சென்னையில் நடந்துள்ளது..

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அந்த பெண் கூறும் போது, கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் தங்கி இருப்பதாக கூறினார். அந்த பொருளை அவர்கள் வேறு ஒருவருக்கு கை மாற்ற உள்ளார். உடனடியாக சென்றால் பிடித்து விடலாம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக இந்த தகவல் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டின் கதவை தட்டினர். கதவு திறக்கப்பட்ட உடன் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

அங்கு ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அறையை சோதனை செய்தனர். அங்கு கஞ்சா எதுவும் சிக்கவில்லை. பிறகு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது அந்த நபரின் மனைவி என்பது தெரிய வந்தது. தன்னுடன் வாழாமல் அங்கு இருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கி உல்லாசமாக இருந்துள்ளனராம். இதனால் இருவரையும் சிக்க வைக்க கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை அந்த பெண்ணை காவல் நிலையம் வரவழைத்த போலீசார் பொய்யான தகவலை சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். மேலும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் இப்படி இருக்க கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+