திருவள்ளூர் ரோட்டில் மணமக்களுக்கு மறக்க முடியாத சர்ப்ரைஸ் தந்த விஜய்.. காட்டு தீயாய் பரவும் வீடியோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது காரில் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்களுடன் கார் பயணத்தில் உரையாடிய இந்த நெகிழ்ச்சியான தருணம், இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கடியான சூழலில் அவர் காட்டிய கனிவும், பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அவர் மேற்கொண்ட சில நெகிழ்ச்சியான செயல்களும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த வாரம் விஜய் தனது அரசியல் பயணங்களின் ஒரு பகுதியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரது கார் மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மூதாட்டி பாதுகாப்பு வீரர்களின் தடையை மீறி விஜய்யின் காரை நோக்கி ஓடிவந்தார். காரின் கதவைத் தட்டி தனது கோரிக்கையை முன்வைக்க அந்தப் பெண்மணி முயன்றபோது, அங்கு ஒரு நிமிடம் பரபரப்பு தொற்றியது.
திருவள்ளூரில் மணமக்கள்
வழக்கமாக இத்தகைய சூழல்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை கார் உடனடியாக நிறுத்தப்பட்டு, அந்த பாட்டியின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மக்கள் கூட்டத்திற்கு இடையே அந்த பாட்டியை புறக்கணிக்காமல் கவனித்தது, அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அரசியல் களத்தில் பொதுமக்கள் தங்களின் தலைவர்களை இவ்வளவு நெருக்கமாக அணுகுவது தற்போது அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் இந்த நிதானமான அணுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டது.
பிரச்சார வேனில் ஏற்றி வாழ்த்திய விஜய்
இந்நிலையில் இன்றைய தினம் மற்றொரு சுவாரசியமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், சென்னை வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய போகிறார்.. இதற்காக விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து காரில் கிளம்பிய விஜய், பாதி வழியில் பிரச்சார வேனில் ஏறினார்.
வேனில் நின்றபடியே சாலையின் 2 பக்கமும் சூழ்ந்தும், திரண்டும் நின்று கொண்டிருந்த மக்களை கண்டு கையசைத்து கொண்டே சென்றார்.. அப்போது திருவள்ளூருக்கு செல்லும் வழியில் புதிதாக திருமணமான ஜோடி ஒன்று விஜய்யை பார்க்க சாலையோரத்தில் காத்திருந்தது. இதனை கவனித்த விஜய், தனது காரை நிறுத்தி அவர்களை அருகில் அழைத்துள்ளார்.
சர்ப்ரைஸ் தந்த விஜய்
பொதுவாகத் தலைவர்கள் காரில் இருந்தபடியே கை அசைத்து வாழ்த்து தெரிவிப்பதுதான் வழக்கம். ஆனால், விஜய் ஒரு படி மேலே சென்று, அந்த மணமக்களைத் தனது வாகனத்திற்குள்ளேயே ஏற்றி அமர வைத்தார்.
தனது பிரச்சார வாகனத்தின் உள்ளே மணமக்களை அழைத்து, அவர்களுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்ததோடு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். எதிர்பாராத இந்த அழைப்பால் அந்தத் தம்பதியினர் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களிடம் நெருங்கி வரும் தலைவர்
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்த அரசியல் சூழலில், ஒரு தலைவர் இவ்வளவு எளிமையாக மக்களை அணுகுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த மூதாட்டியின் விடாமுயற்சியும், மணமக்களுக்கு அவர் அளித்த கௌரவமும் விஜய்யின் அரசியல் நகர்வுகளில் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களைப் பகிரும் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், "மக்களுடனான நேரடித் தொடர்பு ஒரு தலைவருக்கு மிகவும் அவசியம்" எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகள் விஜய்யின் மீதான எதிர்பார்ப்பை அவரது ஆதரவாளர்களிடையே மேலும் அதிகப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications