ஏடிஎம்-மில் இனி சில்லறையும் மாற்றலாம்.. வருகிறது 10 , 20, 50 ரூபாய் நோட்டுகள்.. குட்நியூஸ்
சென்னை: ஏடிஎம்களில் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் வருவது போல் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.500க்கு ஏடிஎம் இயந்திரத்தில் வைத்து சில்லறை பெற்று கொள்ளும் வசதியையும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை மும்பையில் நடந்து வரும் நிலையில் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
நம் நாட்டில் தற்போது யுபிஐ எனும் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் குறைந்த அளவிலான பணத்தை மட்டும் கையில் வைத்துள்ளனர். அனைவரும் யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் என்பது குறைந்துள்ளது. இதனால் திடீரென்று கடைகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கி கொண்டு பணம் கொடுத்தால் அவர்களுக்கு சில்லறை கொடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இதனால் ஹோட்டல், கடை வியாபாரிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகை்கு தீர்வு காண மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதாவது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் வழங்கும் வகையில் நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
இதற்கான சோதனை தற்போது மும்பையில் நடந்து வருகிறது. மும்பையில் பணப்புழக்கம் அதிகம் உள்ள லோக்கல் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுலகங்களில் இந்த இத்தகைய ஏடிஎம்கள் நிறுவி சோதிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை போல் 20 ரூபாய், 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வழங்கும் சோதனை மும்பை ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஏடிஎம்-யில் சில்லறை வழங்கப்படும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.500 நோட்டை வழங்கினால் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து சில்லறையை பெறும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக நன்மைகள் இருந்தாலும் சில முக்கிய சவால்களும் உள்ளன. அதாவது புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுவது வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அந்த மையங்களுக்கான இடம் தேர்வு, செக்யூரிட்டி நியமனம் உள்ளிட்டவற்றால் கூடுதல் நிதிச்சுவை ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் அச்சிடுதல் மற்றும் வங்கிகளில் புழக்கம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்அதனை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவது சவாலாக இருக்கும். இதனை சரிசெய்ய 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சடிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications