தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அலர்ட்.. கொரோனா தடுப்பு மருந்துகளை வைத்திருக்க அறிவுரை
சென்னை: கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை போதியளவில் கையிருப்பு வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு இந்தியாவிற்குள்ளும் வேகமாக பரவி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அதன் பிறகு ஓரளவு நிலைமை சரியாகி வந்துகொண்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் நாடு முழுவதும் பரவலாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் இப்போதே முன்னெச்சரிகை நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் உட்பட மாநிலங்களின் சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
அதன் படி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என்றும் வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் பைப் லைன்கள் சீராக இயங்குகிறதா? என்பதையும் முன்கூட்டியே சோதனை செய்து பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துள்ளது. தமிழக அரசும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications