சீனுக்குள் வந்த தமிழிசை.. தமிழக சிற்றுண்டி திட்டமே பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைதானாம்!
சென்னை: மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக கல்விப் புரட்சியில் புதிய அத்தியாயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிகளில் ஏற்கனவே மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1,14,95 மாணவர்களுக்கு ரூ33.56 கோடியில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்த முதல்வர்
மதுரை பள்ளிக்கூடத்தில் இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்களுக்கும் உணவு ஊட்டிவிட்டார். முதல்வரின் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் #TNBreakfast என்ற ஹேஷ்டேகுடன் டிரெண்டாகி வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் பார்வை
முதல்வரின் இத்திட்டத்தை வரலாற்று பார்வையுடன் அமைச்சர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தமிழக அமைச்சர் பொன்முடி, சா்.பிட்டி தியாகராயா் அவர்களால் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது 102 ஆண்டுகளுக்கு பிறகு அதே செப்டம்பா் மாதத்தில் காலை சிற்றுண்டி திட்டம் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது என திராவிடர் இயக்க வரலாற்று சாதனையாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கருத்து
இன்னொரு பக்கம், பாஜகவினர் இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். இது அதிமுக ஆட்சிக் காலத்திட்டம் என்று பல பாஜகவினர் பதிவிட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானா ஆளுந்நர் தமிழிசை சவுந்தரராஜன், இத்திட்டமே பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனின் ட்விட்டர் பதிவு: 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications