Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனுக்குள் வந்த தமிழிசை.. தமிழக சிற்றுண்டி திட்டமே பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைதானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக கல்விப் புரட்சியில் புதிய அத்தியாயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிகளில் ஏற்கனவே மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1,14,95 மாணவர்களுக்கு ரூ33.56 கோடியில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்த முதல்வர்

தொடங்கி வைத்த முதல்வர்

மதுரை பள்ளிக்கூடத்தில் இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்களுக்கும் உணவு ஊட்டிவிட்டார். முதல்வரின் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் #TNBreakfast என்ற ஹேஷ்டேகுடன் டிரெண்டாகி வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் பார்வை

அமைச்சர் பொன்முடியின் பார்வை


முதல்வரின் இத்திட்டத்தை வரலாற்று பார்வையுடன் அமைச்சர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தமிழக அமைச்சர் பொன்முடி, சா்.பிட்டி தியாகராயா் அவர்களால் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது 102 ஆண்டுகளுக்கு பிறகு அதே செப்டம்பா் மாதத்தில் காலை சிற்றுண்டி திட்டம் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது என திராவிடர் இயக்க வரலாற்று சாதனையாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கருத்து

பாஜக கருத்து

இன்னொரு பக்கம், பாஜகவினர் இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். இது அதிமுக ஆட்சிக் காலத்திட்டம் என்று பல பாஜகவினர் பதிவிட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானா ஆளுந்நர் தமிழிசை சவுந்தரராஜன், இத்திட்டமே பாஜக அரசின் புதிய கல்வி கொள்கைப்படிதான் தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்

தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனின் ட்விட்டர் பதிவு: 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+