குப்பைகளுடன் மோடி, யோகி படங்கள்.. கொந்தளித்த சமூக வலைதளம் - தூய்மை பணியாளருக்கு மீண்டும் வேலை
சென்னை: குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை எடுத்து சென்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் புகைப்படங்களை குப்பைகளுடன் வைத்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 16 ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குப்பை வண்டியில் மோடி, யோகி படங்கள்
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த துப்புரவு தொழிலாளியின் பெயர் பாபி என்றும், இவர் ஜெனரல்கஞ்ச் என்ற பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குப்பை வண்டியில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் படங்களை எடுத்து சென்றதற்காக அவர் மீது பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தூய்மை பணியாளர் பாபி பொறுப்பாக பணி செய்யவில்லை என்று கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடும் எதிர்ப்பு
இந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஏழை கூலித் தொழிலாளியை இவ்வாறு பணியிடை நீக்கம் செய்தது அவரது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாபிக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்ததுடன் அவர் மீது நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தொழிலாளி விளக்கம்
இதுகுறித்து நகராட்சி ஆணையரை சந்தித்து விளக்கமளித்த பாபி, குப்பையில் யாரோ வீசிய படத்தை குப்பைகளுடன் வண்டியில் கொட்டியதாகவும், இதை கண்ட சிலர் தன்னை திட்டியதாகவும் ஒருவர் 2 படங்களை எடுத்துச்சென்றதாகவும், உடைந்த ஒரு படத்தை மட்டும் விட்டுச்சென்றதாகவும் கூறினார். குப்பைகளை அகற்றுவதே தன்னுடைய பணி என்றும், இதன் தீவிரம் புரியாமல் குப்பையில் கிடந்த படங்களை எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

மீண்டும் வேலை
இந்த நிலையில் பாபிக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மதுரா விருந்தாவன் நகராட்சி ஆணையர் அருணயா ஜா தெரிவிக்கையில், "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது. இனி அவர் மிகவும் கவனமாக தன்னுடைய பணியை செய்ய வேண்டும்." என்றார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications