சட்டசபையில் கேள்வி கணைகளால் துளைக்கும் செந்தில் பாலாஜி.. பதில் இன்றி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
சென்னை: கடந்த 9 மாதங்களில் மின் பராமரிப்பு பணிகளை செய்தீர்களா என கேட்ட போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதற்கு பதில் இல்லை என மின்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின.
இதற்கு செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மேலும் அணில்கள் மின் வயர்களை உரசுவதால் மின் தடை ஏற்படுகிறது என விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சிகள்
அணிலால் மின் தடை என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் அணில்களால் மின் தடை ஏற்படுவது வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இன்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

கேள்வி
அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினார். அவர், கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?'என கேள்வியைக் கேட்டார். இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பதில் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு கேள்விதான்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
@EPSTamilNadu இடம் 'கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?' என ஒரேயொரு கேள்வியைக் கேட்டேன்.

லாயிட்ஸ் சாலை
பதில் இல்லை! சென்னை லாயிட்ஸ் சாலையில் கூட
@PThangamanioffl பராமரித்த நிலைமை இதுதான். பிறகு எப்படி பதில் இருக்கும்? என பதிவில் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிமுக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் நெருக்கடிகளை கொடுத்து வருவது சட்டசபை நிகழ்வுகள மூலம் தெரிகிறது.












Click it and Unblock the Notifications