யோகா இந்திக்கு மட்டும் சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா.. வைரமுத்து சுளீர் கேள்வி
யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்று கேட்டுள்ள கவிஞர் வைரமுத்து இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை: இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த 37 பேரும் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

அப்போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , "தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள் என்றும் கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications