தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...? ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்
சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அதிகாரிகள் பலரும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்திருந்தனர்.
இது தொடர்பாக அங்கு சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க தேவை இல்லை என்பது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என வாதிட்டனர் அந்த அதிகாரிகள். ஆனால் தமிழக அரசு, கட்டாயம் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளதே என கேட்டதற்கு, அதுபற்றி எங்களுக்கு தெரியாது என பதிலளித்தனர் அந்த அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், பாஜகவின் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.
தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே
சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.
இரண்டையும்
மறுத்தால் எப்படி?
தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்...?
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications