தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிக்க மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி காரணங்கள் இதுதான்! வைரமுத்து ட்வீட்
சென்னை: நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வ.உ.சி வியாபாரி, வேலுநாச்சி ஜான்சிராணி சாயல், மருதிருவர் தீவிரவாதிகள் என மத்திய அரசு காரணம் கூறியுள்ளதாகவும் வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் என பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்திருக்கிரது மத்திய அரசு.

விடுதலை வீரர்கள்
தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், வட இந்தியாவில் ஜான்சிராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆங்கிலேயர்கள் வரி வசூல் உரிமை பெற்ற தொடக்க காலத்திலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடிய வீரமங்கை வேலுநாச்சியார், அவர்தம் தளபதிகள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மத்திய அரசு இந்த அலங்கார ஊர்தியை அனுமதிக்கவில்லை.

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் இந்த போக்குக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பியுள்ளார்.

வேதனையும் ஏமாற்றமும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது வேதனையும் ஏமாற்றமும் தருகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 7 முறை திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றனர். அத்தகைய திருத்தங்கள் செய்த போதும் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருக்கின்றனர். இதில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைரமுத்து பதிவு
இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது. இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications