மதம் என்பது வாழ்க்கை முறை! ஈகை வழிபாடு! இனிய ரமலான் வாழ்த்துகள்! வைரமுத்து
சென்னை: மதம் என்பது வாழ்க்கை முறை, ஈகை என்பது வழிபாடு என ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நேற்றைய தினம் பிறை தெரிந்ததால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். அதன்படி காலை முதலே கூட்டு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொழுகைகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அக்கம் பக்கத்தாருக்கு இனிப்பு, பலகாரங்களை கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரமலான் பண்டிகை குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உலக
இஸ்லாமியப் பேருலகத்துக்கு
இனிய ரமலான் வாழ்த்துகள்
இந்த இன்பத் திருநாளில்
இதயமே
ஈகைப் பொருளாகிறது;
அன்பே பரிமாறப்படுகிறது
இன்னோர் மனிதர்க்கு
இன்னா நேராதவரை
எந்த வாழ்க்கை முறையும்
இனியதுதான்
அது
மாண்புக்குரியது
மதிக்கப்பட வேண்டியது
மதம்
ஒரு வாழ்க்கை முறை;
ஈகை என்பது வழிபாடு
வாழ்க்கை முறையை
மதிக்கிறோம்;
வழிபாட்டை வாழ்த்துகிறோம்
உலகத்தில்
காற்றுவீசும் பரப்பெங்கும்
அமைதியும் அன்பும் நிலவட்டும்
ஈகைத் திருநாள் வாழ்க!
இவ்வாறு வைரமுத்து தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications