தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்
விமான படை வீரர்களுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: "நாங்கள் கனவு கண்டால் ஆகாயம் அதிரும்...நட்சத்திரம் உதிரும்..." என்று அன்று வைரமுத்து சொன்னது நூத்துக்கு நூறு பலித்துவிட்டது. இன்று நடத்திய விமான படை தாக்குதலுக்கு வீர வணக்கம் சொல்லியுள்ளார் வைரமுத்து!
தமிழ் பாடலாசிரியர்களிலேயே, சமூக அவலங்களுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருப்பதில் முதன்மையானவரும், முக்கியமானவரும் கவிஞர் வைரமுத்துதான்.
சமூகத்துக்கு எதிரான சம்பவங்களை பேட்டிகள் மூலமாகவும், கவிதை வடிவிலும் அதனை வெளிப்படுத்த தயங்காதவர் வைரமுத்து. அது விவசாயிகள் பிரச்சனை முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு வரை நீண்டு வந்தது.
|
கவிதை
இப்போது 40 பேர் மீது தாக்குதலை நடத்தி கொடூரத்தை நடத்தியபோது கூட வைரமுத்து, இந்தியா மன்னிக்காது என்ற தலைப்பில் கவிதை ஒன்றினை வெளியிட்டார்.

காஷ்மீர் ரோஜா
அதில், "எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை...எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை... என்ற அந்த இரங்கற் கவிதை படிப்பவர் மனதை கலங்கடித்தது. இன்று இந்தியா தந்த பதிலடிக்கு கவிஞர் தனது கவிதை நடையிலேயே வீரர்களுக்கு வணக்கம் சொல்லி உள்ளார்.
|
அசகாய சூரர்களே
அதில், "போர்மீது விருப்பமில்லை.
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.

உள்நோக்கம் இல்லை
உண்மையிலேயே வைரமுத்து சொன்னதுபோல் இந்தியா மன்னிக்காதுதான்.. மன்னிக்கவும் இல்லை. இந்த ட்வீட்டில் வைரமுத்து ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளார். போர் புரிவது இந்தியாவின் நோக்கம் இல்லை என்றாலும் அதற்கான வழியை வித்திட்டு சென்றதற்கு காரணம் தீவிரவாதம்தான் இந்த ட்வீட்டில் வைரமுத்து உரக்க சொல்லி தெளிவுபடுத்தி உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications