அமைச்சர் உதயநிதிக்கு இருப்பது துணிவா? வாரிசா?.. கவிஞர் வைரமுத்துவின் கவிதை
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிவு மிக்க வாரிசு என கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழ்ந்தார்.
சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இனமானம் காத்த தமிழ்வானம் எனும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் அன்பழகன் குறித்து வைரமுத்து பேசும்போது உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கவிதைகளால் புகழ்ந்தார்.

வாரிசா துணிவா
வைரமுத்து தனது கவிதையில், அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, வாரிசா? துணிவா? என எல்லாருக்கும் கேள்வி இருக்கிறது. ஆனால் அவர் துணிவு மிக்க வாரிசு என வைரமுத்து பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதிக்கு பதவிகளை கொடுத்தால் அது வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்தது போல் இருந்துவிடும் என கருதி முதல்வர் அமைதியாக இருந்துவிட்டார்.

அமைச்சர் பதவி
ஆனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவியாவது கொடுக்க வேண்டும் என அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அது போல் மாவட்ட திமுகவினரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தார்.

அமைச்சராக உதயநிதி பதவிப்பிரமாணம்
அதன்படி கடந்த 14 ஆம் தேதி உதயநிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை எழுப்பியது. பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வரத்தான் செய்யும். அவற்றை எனது செயல்பாடுகள் மூலம் பதிலடி தருவேன் என தெரிவித்திருந்தார்.

கூட்டணி கட்சியினர்
கூட்டணி கட்சிகளும் அமைச்சராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. அது போல் உதயநிதி துணை முதல்வராக கூட தகுதி உடையவர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். அதுபோல் ஒருவரை அமைச்சரவையில் சேர்ப்பதும் நீக்குவதும் அரசியலமைப்பு சட்டம் அந்த மாநில முதல்வருக்கு வழங்கிய அதிகாரம் என்றும் இந்த அதிகாரத்தில் நாம் விமர்சனம் செய்யலாமே தவிர தலையிட முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
விலகும் திருமாவளவன்? சட்டசபை தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்க முடிவு.. வெளியாகப்போகும் அறிவிப்பு -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications