கையும் காலும் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதை அறிய.. வைரமுத்துவின் கவிதை ட்வீட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கைகளும் கால்களும் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதை அறிவது எப்படி என்பது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் எழுதியுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
உங்கள் உடலின்
எல்லா பாகங்களையும்
நீங்களே தேய்த்து
நின்றுகொண்டே குளிக்கும்வரை
உங்கள் கால்விரல் நகங்களை
நீங்களே குனிந்து
களைந்து கொள்ளும்வரை
படுக்கையில் உங்கள் உடல்
உங்கள் இசைவுக்கு
அசையும் காலம் வரை
கையும் காலும்
உங்களை இன்னும்
கைவிடவில்லை என்று பொருள்
வாழ்க
இவ்வாறு தனது கவிதையில் ஒரு மனிதனின் கைகளும் கால்களும் கைவிடவில்லை என்பதை அறிய இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என கவிதை நடையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இவரது கவிதை நடைக்கு நெட்டிசன்களும் கவிதை நடையில் பதிலளித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications