நறுமுகையே.. நறுமுகையே... பாடலை அழகான குரலில் பாடி அசத்திய சீனா பெண்... வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நறுமுகையே.. நறுமுகையே பாடலை அழகாக பாடி அசத்திய சீனா பெண்ணின் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
சீனா தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழியை நன்கு கற்று தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழ் மொழியை மேம்போக்காக சீனர்கள் கற்றுக் கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம், இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என தமிழ் மொழியின் மீது அளவுகடந்த பற்றுடன் கற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு பாடலை சமூக வலைதளங்களில் பாடி வெளியிட்டிருக்கின்றனர் சீன பெண்கள்.
கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய நடையிலான இருவர் திரைப்படத்துக்காக எழுதிய நறுமுகையே.. நறுமுகையே.. என்ற பாடலைத்தான் அந்த சீனா பெண்கள் அத்தனை அழகாக பாடி இருக்கின்றனர்.. நறுமுகையே.. நறுமுகையே பாடல் வரிகளின் அர்த்தத்தை உள்வாங்கியவர்களாகவே அவர்கள் பாடி அசத்தி இருக்கின்றனர்.
இதனை வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சீனப் பெண்களும் செந்தமிழ்ப் பாட்டும்... #நறுமுகையே #தமிழ் என்ற தலைப்பில் இந்த பாடலை பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications