வண்டலூருக்குள் வந்த விருந்தாளி.. ஓட்டேரி ஏரியில் "குடை நீர்மத்தி".. மினி வேடந்தாங்கலால் சென்னை குஷி
சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள ஓட்டேரிக்கு, பறவைகள் வர துவங்கியிருக்கின்றன.. "மினி வேடந்தாங்கல்" என்ற சிறப்பு பெற்ற ஓட்டேரி ஏரியில் பல்வேறு பணிகள் துரிதமாக ஆரம்பமாகியிருக்கின்றன. இது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஓட்டேரி ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தற்போது வரை இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன..

பறவைகள் குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், இந்த ஏரிக்கு வண்ண நாரை, நீர்க்காகம், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், சிறுகொக்கு, நத்தைகொத்தி, வக்கா, மாட்டுக்கொக்கு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.
குறிப்பிட்ட இந்த 3 மாதங்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரியின் நடுவே உள்ள மரத்தில் பறவைகள் அதிக அளவில் அமர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ஏரி, "மினி வேடந்தாங்கல்" போலவே காட்சியளிக்கும்.. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அதிகளவில் இந்த ஏரிக்கு சென்று பறவைகளை பார்த்து ரசித்து செல்வார்கள்.. அதேபோல, பார்வையாளர்கள் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள உயர் கோபுரத்தின் மீது ஏறி தொலைநோக்கி மூலம் பறவைகளை பார்த்து ரசிப்பார்கள்..
எனினும், பார்வையாளர்கள் பறவைகளை கண்டு ரசிப்பதற்கு வசதியாக, 2 வருடங்களுக்கு முன்பு, ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. அத்துடன், இருக்கையுடன் கூடிய நடைபாதை மற்றும் கரைகளும் பலப்படுத்தப்பட்டன.
குடைபோன்ற மரம்: பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பதற்கு ஏதுவாக, ஏரியினுள் நீர்மத்தி மரங்களும் நடப்பட்டன. இவை தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. குடை போன்று இருப்பதால், பறவைகள் முட்டையிடுவதற்கும், குஞ்சு பொறிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். தண்ணீரில் இருப்பதால், மற்ற விலங்குகளிடம் இருந்து பறவை குஞ்சுகளும் பாதுகாக்கப்படுகின்றன.
பொதுவாக ஏரிக்கு வரும் ஒரு பறவை, எந்த இடத்தில் மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை தேடும். பின், தன் இனத்தை அழைத்து வருமாம்.. ஆனால், இப்போது பறவைகள் சீசன் துவங்கியுள்ள நிலையில், பறவைகள் வரத்து குறைந்துவிட்டதாம். காரணம், அம்மரங்கள் தற்போது அதிகளவில் வேடந்தாங்கலில் வளர்ந்துவிட்டன.
பறவைகள்: ஏரியினுள் உள்ள நீர்மத்தி மரங்களில், 200க்கும் மேற்பட்ட பறவைகளே உள்ளன. அதேபோல பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. ஏரிக்கு செல்லக்கூடிய பாதையும் அடைக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் மினி வேடந்தாங்கலை தேடி வரும் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிடுகிறார்களாம்.
அப்படியே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், "வாட்ச் டவரில்" நின்று பறவைகளை கண்டு ரசிக்க முடியாத அளவிற்கு மரக்கிளைகள் மூடி கிடப்பதாகவும், நடைபாதைகளிலும் குப்பை, கூளங்கள் நிரம்பியிருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, பறவைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கக்கூடிய வகையில், இவைகளையெல்லாம் சீர்செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
நம்பிக்கை: இதனிடையே பூங்கா தரப்பில் சொல்லும்போது, இப்போதைக்கு குறைந்த அளவிலேயே பறவைகள் வந்துள்ளன. அடுத்த மாதம்தான் பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.. அதற்குள் ஏரியினுள் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தற்போது கையிலெடுக்கப்பட்டுள்ளன.. அவைகளை விரைந்து முடித்து, பறவைகளை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications