மணிக்கு 180 கி.மீ ஸ்பீடில் பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ரயிலுக்குள் நடந்த மேஜிக்.. வீடியோ பாருங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், மணிக்கு 180 கி.மீ. வேகத்திலும் அதிர்வில்லாமல் இயக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வீடியோவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் அதிநவீன சொகுசு ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, அதிவேகம், சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, அடுத்து வரும் ஸ்டேஷன் பற்றிய அறிவிப்பு என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வந்தே பாரத் ரயில்
இந்தியாவின் பிரீமியம் ரயிலாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், பிற அதிவிரைவு ரயில்களை விட வேகமாக செல்வதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், சென்னையில் இருந்து நெல்லைக்கு சுமார் 600 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் பயண நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை சென்றுவிடும். பயண நேரம் சுமார் 2 மணி நேரம் மிச்சப்படுவதால் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
படுக்கை வசதியுடன் கூடிய
தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். இதனை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டது.
இந்த ரயில் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட இந்த ரயில்கள் மாநிலம் விட்டு மாநிலம் என தொலைதூரங்களுக்கு இரவு நேர ரயில்களாக இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் புதுடெல்லி - லக்னோ ரூட்டில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பயண இலக்கை தோராயமாக 8 மணி நேரத்தில் கடக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது வரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல, எப்போது முதல் இயக்கப்படும் என்ற தகவலும் இல்லை.
Vande Bharat Sleeper tested today by Commissioner Railway Safety. It ran at 180 kmph between Kota Nagda section. And our own water test demonstrated the technological features of this new generation train. pic.twitter.com/w0tE0Jcp2h
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 30, 2025
எனினும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டம் பற்றிய வீடியோ ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
180 கிமீ வேகத்தில் பாய்ந்த ரயில்
அதில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் செல்கிறது. ரயிலின் லோகோ பைலட் கேபினுக்குள் மூன்று கண்ணாடி கிளாஸ்களுக்கு மேல் ஒரு தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸ் வைக்கப்பட்டுள்ளது. ரயில் அவ்வளவு வேகத்தில் சென்றாலும் கூட, கண்ணாடி கிளாசில் இருந்து ஒரு சொட்டு நீரும் வெளியேறவில்லை. கண்ணாடி கிளாசும் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. இது தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ள அஸ்வினி வைஷ்ணவ் அதில் கூறியிருப்பதாவது:-
கண்ணாடி கிளாசில் வைக்கப்பட்ட தண்ணீர்
"ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தானின் கோட்டா - நாக்டா பிரிவுக்கு இடையில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. கண்ணாடி கிளாசில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஆடாமல், அசையாமல் இருந்தது ரயிலின் புதிய தொழில்நுட்ப அம்சங்களை நிரூபித்தது" என்று பதிவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications