வணிகர் தினம் இன்று.. கடைகள் மூடல்.. திருச்சியில் விடியல் வணிகர் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
திருச்சியில் இன்று வணிகர்கள் மாநாடு நடக்க உள்ளது
சென்னை: தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளது.. ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்... வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம்.
அதேபோல, ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துவதும் வழக்கம்.. ஆனால், கடந்த வருடம் வணிகர் தினத்தன்று இது எதுவுமே நடத்த முடியவில்லை..

கொரோனா
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததாலும், அந்த சமயம், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் சூழல் இருந்ததாலும், கடைகள் திறந்தே இருந்தன.. மாநாடும் நடத்த முடியவில்லை.. ஆனால், இப்போது தொற்று குறைந்துள்ள நிலையில் மாநாடு நடத்த முடிவாகி உள்ளது.. இப்படி நடத்தப்படும் மாநாட்டில், வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படுவது வழக்கம்.

வணிகர் தினம்
அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கப்படும்.. அந்த வகையில், 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருச்சியில் இன்று, தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வரை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

மாநாடு
மாநாடு நடப்பதால், வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று ஓட்டல்களுக்கு விடுமுறை அளிக்க விக்கிரமராஜா கோரிக்கை வைத்திருந்திருந்தார்.. இதற்காகவே வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து, மாநாட்டுக்கு இன்று செல்கிறார்கள்.. அதேபோல, உணவகங்களுக்கு இன்று காலை ஒருவேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது... இன்று பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூக்கடை
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பொருள் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளனர். எனினும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரம் காய்கறி கடைகள், 2,000 பழக் கடைகள் மற்றும் ஏராளமான பூக்கடைகள் உள்ள நிலையில், பூக்கடைகள் மட்டும் இன்று இயங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications