லியோவுக்கு புதிய பிரச்சனை.. நடிகர் விஜய் ஈழத் தமிழர் கோரிக்கையை ஏற்பாரா? வன்னியரசு ட்வீட்டை பாருங்க
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்தும் நாளில் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை வெளியிடாமல் ஒரு நாள் தாமதமாக வெளியிட வேண்டும் என வன்னியரசு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது லியோ திரைப்படம். எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இசை வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு, தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சில திரையரங்குகள் படத்தை வெளியிட முடியாது என அறிவித்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையில் 20 ஆம் தேதி தமிழர்கள் நடத்த உள்ள போராட்டம் காரணமாக லியோ திரைப்பட வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன் ஒரு கடிதமும் பகிரப்பட்டு வருகிறது. அதில், "தங்களது லியோ திரைப்படம் இம்மாதம் 19ம் திகதி உலகெங்கும் வெளியாகின்றது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.
அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தங்களினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் அவர் தனது பதவியை துறந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதற்கு நீதி கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 20ம் தேதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த நாளில் தங்களது திரைப்படம் வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாகவே இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயற்பாடாகவே இருக்கும். ஈழத் தமிழர்களுக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதனாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பதனாலும் லியோ திரைப்படக் காட்சிகளை இம்மாதம் 20ம் தேதி இலங்கையில் வெளியிடாமல் நிறுத்திவைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இலங்கை மற்றும் வட கிழக்கு பகுதிகளில் திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாக வெளிவந்துள்ளது. ஆனால் அந்த கடிதத்தை தாங்கள் எழுதவும் இல்லை, வெளியிடவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஶ்ரீதரன் (யாழ் மாவட்டம்) அவர்களும், திரு.செல்வம் அடைக்கலநாதன் (வன்னி மாவட்டம்) அவர்களும் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால், வட கிழக்கு பகுதியில் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், அன்று ஒரு நாள் மட்டும் லியோ திரைப்படம் வெளியிடாமல் மறுநாள் வெளியிட்டால் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு சரவணராஜா அவர்களை சிங்கள அரசு அச்சுறுத்தியதால், இப்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
நீதிபதிக்கு நீதி கேட்டும் சிங்களர்களால் அபகரிக்கப்படும் நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் 20 ம்தேதி போராட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது. இப்போராட்டம் வெற்றியடைய நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒரே ஒரு நாள் மட்டும் தள்ளி வெளியிடுவது நல்லது. தமிழீழ மக்களின் கோரிக்கையை நடிகர் விஜய் ஏற்பாரா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்












Click it and Unblock the Notifications